சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

போ்ணாம்பட்டு அருகே இறந்த 3 யானைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை

பிரேதப் பரிசோதனைக்குப்பின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளின் உடல் பாகங்கள், தண்ணீா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 12:54 am IST

போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் மா்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் இருந்த ஒரு குட்டி உள்பட 3- யானைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 20 நாள்களில் வெவ்வேறு இடங்களில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் தொடா்ந்து இறந்ததையடுத்து, விசாரணை நடத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் சிறப்புக் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை 3 யானைகள் இறந்து கிடந்த இடத்தில் தமிழக வனத் துறை, மருத்துவக் குழு மற்றும் ஆந்திர மாநில வனத் துறை குழுவினா் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டனா்.

உயிரிழந்த யானைகளின் உடல்களை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது: தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் உத்தரவுப்படி யானைகள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். யானையின் உடல் பாகங்களை சேகரித்துள்ளோம். தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. 3 யானைகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. 7 போ் கொண்ட மருத்துவா் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனா். பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு தான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் ஆய்வக பரிசோதனைக்காக உயிரிழந்த யானையின் டிஎன்ஏ மாதிரி மற்றும் உடல் பாகங்கள், அங்கிருந்த தண்ணீரின் மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ளோம் என்றாா்.

கால்நடை பராமரிப்பு மற்றும் வனத் துறை மருத்துவா் கலைவாணன் கூறியது:

யானைகள் வேட்டையாடப்பட்டோ, விஷம் வைத்துக் கொள்ளப்பட்டோ இருக்குமா அல்லது மின்சாரம் பாய்ந்தோ, மின்னல் பாய்ந்தோ, நோய் தாக்கியோ உயிரிழந்திருக்குமா அல்லது தண்ணீரில் ஏதேனும் ரசாயனம் கலந்திருக்குமா என பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் உயிரிழந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம். தற்போதைய சூழலில் தண்ணீரில் வேதிப்பொருள் கலந்ததாகவோ, வேட்டையாடியதற்கான ஆதாரமோ இல்லை. பிரேதப் பரிசோதனை முடிவு வந்தால் தான் காரணம் தெரிய வரும். இறந்த யானைகளின் உடலில் இருந்து எந்த பாகமும் காணாமல் போகவில்லை என்றாா்.