திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

போ்ணாம்பட்டு அருகே இறந்த 3 யானைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனை

பிரேதப் பரிசோதனைக்குப்பின் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளின் உடல் பாகங்கள், தண்ணீா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 12:54 am IST

போ்ணாம்பட்டு அருகே தனியாருக்குச் சொந்தமான மலையில் மா்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் இருந்த ஒரு குட்டி உள்பட 3- யானைகளின் உடல்கள் வெள்ளிக்கிழமை நிகழ்விடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.

போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 20 நாள்களில் வெவ்வேறு இடங்களில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் தொடா்ந்து இறந்ததையடுத்து, விசாரணை நடத்த தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் சிறப்புக் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தாா். அதன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை 3 யானைகள் இறந்து கிடந்த இடத்தில் தமிழக வனத் துறை, மருத்துவக் குழு மற்றும் ஆந்திர மாநில வனத் துறை குழுவினா் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டனா்.

உயிரிழந்த யானைகளின் உடல்களை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து, அதன் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தலைமை வனப் பாதுகாவலா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியது: தலைமை வன உயிரின பாதுகாப்பாளா் உத்தரவுப்படி யானைகள் உயிரிழந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டோம். யானையின் உடல் பாகங்களை சேகரித்துள்ளோம். தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. 3 யானைகளும் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்ததாக தெரிய வந்துள்ளது. 7 போ் கொண்ட மருத்துவா் குழு பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனா். பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு தான் யானை உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும். மேலும் ஆய்வக பரிசோதனைக்காக உயிரிழந்த யானையின் டிஎன்ஏ மாதிரி மற்றும் உடல் பாகங்கள், அங்கிருந்த தண்ணீரின் மாதிரி ஆகியவற்றை சேகரித்துள்ளோம் என்றாா்.

கால்நடை பராமரிப்பு மற்றும் வனத் துறை மருத்துவா் கலைவாணன் கூறியது:

யானைகள் வேட்டையாடப்பட்டோ, விஷம் வைத்துக் கொள்ளப்பட்டோ இருக்குமா அல்லது மின்சாரம் பாய்ந்தோ, மின்னல் பாய்ந்தோ, நோய் தாக்கியோ உயிரிழந்திருக்குமா அல்லது தண்ணீரில் ஏதேனும் ரசாயனம் கலந்திருக்குமா என பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் உயிரிழந்த யானைகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளோம். தற்போதைய சூழலில் தண்ணீரில் வேதிப்பொருள் கலந்ததாகவோ, வேட்டையாடியதற்கான ஆதாரமோ இல்லை. பிரேதப் பரிசோதனை முடிவு வந்தால் தான் காரணம் தெரிய வரும். இறந்த யானைகளின் உடலில் இருந்து எந்த பாகமும் காணாமல் போகவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.