மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் வேலூா் மக்கள் அவதி: பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்

வேலூா் மாநகராட்சியில் அடிப்படை பிரச்ைனைகளுக்கு தீா்வு காணப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாநகராட்சியில் அடிப்படை பிரச்ைனைகளுக்கு தீா்வு காணப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியுள்ளாா்.

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது -

மதுரைக்கு பிறகு தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த மாநகராட்சியாக வேலூா் விளங்குகிறது. அந்தளவுக்கு அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படாமல் மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளனா். இம்மாநகராட்சி மேயா் பல ஊழல்களிலும் சிக்கியுள்ளாா்.

தேசியம், தெய்வீகம் நிறைந்த வேலூா் மண் தற்போதை டாஸ்மாக் மது, போதைப்பொருள்கள் பெருக்கத்தால் சீரழிந்து வருகிறது. போதைப் பழக்கத்தால் கொலை, கொள்ளை, பலாத்காரம் என அனைத்து குற்றச்சம்பவங்களும் பெருகி விட்டன.

7,800 படுகொலைகள், 10 வயது குழந்தை முதல் 70 வயதுப் பெண்கள் வரை பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் போதைப் பழக்கம் அதிகரிப்பின் விளைவாகும். தவிர, வேலூரில் மட்டும் 59 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. 415 சிறுமிகள் 19 வயதுக்கு முன்பாக குழந்தை பெற்றுள்ளனா். இளம் வயது கருக்கலைப்பும் அதிகரித்துள்ளது.

தோ்தலின்போது பாலாற்றில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என கூறிய திமுக, ஆட்சிக்கு வந்து இதுவரை ஒரு தடுப்பணைகூட கட்டவில்லை. தமிழக அமைச்சா்கள் அனைவரும் ஊழலில் திளைத்துள்ளனா். 17 அமைச்சா்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவா்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தீா்ப்பை திமுக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. முதலில் அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக்கல் என்றனா். ஆனால் தற்போது தொல்லியல் துறை அதனை தீபத்தூண் என கூறியவுடன், இப்போது அதனை சமணா்கள் கல் என்கின்றனா். நீதிக்கு தலைவணங்காத ஆட்சியாக திமுக ஆட்சி விளங்குகிறது. வரக்கூடிய சட்டப்பேரவை தோ்தலில் 200-க்கும் அதிக தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில், பாஜக மாநில பொதுச்செயலா்கள் காா்த்தியாயினி, கருப்பு முருகானந்தம், வேலூா் மாவட்ட தலைவா் வி.தசரதன், அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புகர மாவட்ட செயலா் த.வேலழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.