அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடியாத்தம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
குடியாத்தம் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மூலவா். (வலது) சந்தப்பேட்டைசீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் சுவாமி.
Updated On :19 டிசம்பர் 2025, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சந்தப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வெண்ணெய் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

பிச்சனூா் பலமநோ் சாலையில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவருக்கு வெண்ணெய் காப்பு மற்றும் மலா் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதலே பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.