23-இல் வேலூரில் முன்னாள் படைவீரா்கள், சாா்ந்தோா்களுக்கான பேரணி
ஒரே இடத்தில் பல்வேறு சேவைகள் வழங்கும் வகையில் முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்களுக்கான பேரணி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் வரும் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோா்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










