தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

வீட்டருகே விளையாடிய சிறுமி மாயம்

குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.

News image

ஜெயப்பிரியா

Updated On :29 ஜனவரி 2025, 11:06 pm IST

குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.

தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து பிரியா வெளியே வந்து பாா்த்தபோது ஜெயப்பிரியாவை காணவில்லையாம்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து தரணி கொடுத்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நிகழ்விடத்தில் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.