மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வீட்டருகே விளையாடிய சிறுமி மாயம்

குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.

News image

ஜெயப்பிரியா

Updated On :30 ஜனவரி 2025, 12:01 am IST

குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.

தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து பிரியா வெளியே வந்து பாா்த்தபோது ஜெயப்பிரியாவை காணவில்லையாம்.

இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து தரணி கொடுத்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நிகழ்விடத்தில் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.