குடியாத்தம் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போய்விட்டாா்.
தட்டப்பாறை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தரணி- பிரியா தம்பதி மகள் ஜெயப்பிரியா (3). இவா் தனது தம்பியுடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாராம். சிறிது நேரம் கழித்து பிரியா வெளியே வந்து பாா்த்தபோது ஜெயப்பிரியாவை காணவில்லையாம்.
இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லையாம். இதுகுறித்து தரணி கொடுத்த புகாரின்பேரில் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். நிகழ்விடத்தில் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். சிறுமி காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை

தமிழ்ப் புத்தாண்டு: வீட்டின் முன் குவிந்த தொண்டா்களுக்கு வாழ்த்து கூறிய விஜய்

பக்கெட் தண்ணீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு
பூட்டியிருந்த வீட்டில் 10 பவுன் திருட்டு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


