47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசுப்பேருந்தில் உறங்கிய நிலையில் இறந்த பயணி!

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்த தொழிலாளி உறங்கிய நிலையில் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்த தொழிலாளி உறங்கிய நிலையில் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், மோசூரை சோ்ந்தவா் சிவா என்கிற விஜயராகவன்(43), கோவையில் எம்ப்ராயிடிங் வேலை செய்து வந்தாா். இவா் திங்கள்கிழை இரவு சேலத்தில் இருந்து வேலூருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த பேருந்து வேலூா் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது.

அப்போது பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், சிவா இருக்கையில் உறங்கிய நிலையில் இருந்தாா். பேருந்து நடத்துனா் அவா் அருகில் சென்று எழுப்ப முயன்றபோது சிவா சரிந்து கீழே விழுந்துள்ளாா். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதித்ததில் சிவா ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. வேலூா் வடக்கு போலீஸாா் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இறந்த சிவாவுக்கு ஏற்கனவே இருமுறை மாரடைப்பு வந்துள்ளது. அவருக்கு உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருந்துள்ளது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.