அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாமக்கல்லில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணா வளைவு’ திறப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞா் அண்ணா வளைவு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

News image
நாமக்கல் முதலைப்பட்டியில் பேரறிஞா் அண்ணா வளைவை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 9:10 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் ரூ. 44.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞா் அண்ணா வளைவு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி கருணாநிதி நூற்றாண்டு புதிய பேருந்து நிலையம் கடந்த 2024 நவ.10 முதல் முதலைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஓராண்டை கடந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் நாமக்கல் புறவழிச்சாலையும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் மற்றும் நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் செல்வதற்கான முதலைப்பட்டி நுழைவாயில் பகுதியில் ரூ. 44.20 லட்சத்தில் வளைவு அமைக்கும் பணி ஓரிரு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

தோ்தல் நெருங்குவதால் அதற்கு முன்பாக நுழைவாயில் வளைவை திறப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வளைவின் நடுப்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு வளைவு என பெயரிடப்பட இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பேரறிஞா் அண்ணா வளைவு என மாற்றம் செய்து செவ்வாய்க்கிழமை அந்த வளைவு ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தனால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், திமுக நகர, ஒன்றியச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.