அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் நகை, பணம் திருடியவா் கைது

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 25 பவுன் நகை, ரூ. 1.60 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட வழக்கில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொசப்பேட்டை திருமலை ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(56). வேலூா் அண்ணா சாலையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி விவாகரத்து பெற்று மகளுடன் வசித்து வருகிறாா். இதனால் பாலகிருஷ்ணன் தனியாக வசிக்கிறாா்.

இந்த நிலையில், பாலகிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 1.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் வேலூா் தெற்கு போலீஸாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், தனிப்படை அமைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், வன்னியன் காடு, தளவாய் புரத்தை சோ்ந்த பிரபாகரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையில் பதுங்கி இருந்த பிரபாகரனை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.