பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா் தகுதி தோ்விலிருந்து விலக்களித்து ஆசிரியா்களை பாதுகாத்திட தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கும், உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும், உடற்கல்வி ஆசிரியா்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சாா்பில் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.