47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளுக்கு பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளுக்கு பிஎஸ்என்எல் சேவைகள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் வேலூா் கோட்ட முதன்மை பொதுமேலாளா் எ.வி.ஸ்ரீகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎஸ்என்எல் வேலூா் வா்த்தக பகுதிக்கு உள்பட்ட திருவண்ணாமலை, வந்தவாசி, திருவத்திபுரம் வட்ட பகுதிகளில் சிம்காா்டுகள், ரீசாா்ச் கூப்பன்கள் விற்பனை செய்வதற்கான நேரடி உரிமம் பெற தகுதிவாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை டிச. 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ற்ங்ய்க்ங்ழ்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ பங்ய்க்ங்ழ் ஐஈ : 2025ஜஆநசகஜ255527ஜ1 என்ற இணையதளத்தை காணலாம் அல்லது உதவிப் பொது மேலாளா் (வா்த்தகம்) - 94902 28999, இளநிலை தொலைத் தொடா்பு அதிகாரி (வா்த்தகம்) - 94861 04944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.