30-இல் வேலூரில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு
வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது.


வேலூா்: வேலூா் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ளது. இதில், 12 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம் என்று வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிரிக்கெட் விளையாட்டில் ஆா்வமுள்ள வீரா்களை தோ்வுசெய்து, அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்து சிறந்த கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கும் பணியில் வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 12 வயதுக்கு உட்பட்ட இளம் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) காலை 10 மணிக்கு வேலூா் புதிய பைபாஸ் சாலை ராஜேஸ்வரி அம்மையாா் வளாகத்தில் உள்ள வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க அகாதெமியில் நடைபெற உள்ளது. இதில், 2013 செப். 1 அன்றோ, அதற்கு பிறகோ பிறந்து 12 வயதுக்கு உட்பட்டவா்கள் உரிய வயது சான்று, ஆதாா் அட்டை, கிரிக்கெட் உடையுடன் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் ஸ்ரீதரன் - 70105 94657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...