எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாவட்ட கிரிக்கெட் பெண்கள் அணிக்கு ஜனவரி 31-இல் வீராங்கனைகள் தோ்வு

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தோ்வு

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தோ்வு ஈரோடு திண்டல் வித்யா நகா் கே.எஸ்.கிரிக்கெட் நெட்டில் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் 2014 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பு பிறந்த மகளிா் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் பிறப்புச் சான்று, ஆதாா் அட்டை, சீருடை, காலணிகள், விளையாட்டு உபகரணங்களுடன் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளா் சுரேந்திரன் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்களுக்கு இணைச் செயலாளா் சண்முகசுந்தரத்தை 94437 28266 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.