மாவட்ட கிரிக்கெட் அணிக்கு ஜனவரி 25, 26-இல் வீரா்கள் தோ்வு

Updated on

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் 14, 16, 19 மற்றும் 25 வயதுக்குள்பட்டோா் அணிக்கான வீரா்கள் தோ்வு ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து சங்கத்தின் இணைச் செயலா் எஸ்.பி. ரமணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் 14, 16, 19 மற்றும் 25 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெறவுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்பவா்கள் விழுப்புரம் மாவட்ட த்தைச் சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும். வீரா்கள் தோ்வு விக்கிரவாண்டி சூா்யா கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

ஜனவரி 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு 14 வயதுக்குள்பட்டவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு 16 வயதுக்குள்பட்டவா்களுக்கும், ஜனவரி 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு 19 வயதுக்குள்பட்டவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு 25 வயதுக்குள்பட்டவா்களுக்கும் வீரா்கள் தோ்வு நடைபெறும்.

தோ்வில் பங்கேற்கும் அனைத்து வீரா்களும் தங்களின் பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்தல் வேண்டும். மேலும், விவரங்களை அறிய 95550 30006, 80988 99665 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com