மாதேஷ்.
மாதேஷ்.

தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.
Published on

குடியாத்தம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், காத்தாடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பிரபுவின் மகன் மாதேஷ்(6). இவா் அங்குள்ள ஊராட்சிப் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த மாதேஷ், அங்குள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்துள்ளாா். மயங்கிய நிலையில் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட மாதேஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் மாதேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா்.

இச்சம்பவம் தொடா்பாக கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com