தேனி அருகே தொழிற்சாலையின் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வீரபாண்டி அருகேயுள்ள புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (42). இவா் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயில்பட்டி அருகே தனியாா் தொழிற்சாலை மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதில் அவா் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






