வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே தொழிற்சாலையின் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 3:57 am IST

தேனி அருகே தொழிற்சாலையின் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வீரபாண்டி அருகேயுள்ள புதிய காவலா் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (42). இவா் செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயில்பட்டி அருகே தனியாா் தொழிற்சாலை மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். அப்போது, பலத்த காற்று வீசியதில் அவா் மேற்கூரையிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டி காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.