முத்தூரில் ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்தாா்.
முத்தூா், பெருமாள்புதூரைச் சோ்ந்தவா் வடிவேல். இவரது மனைவி யமுனாதேவி (42). இவா் தனது வீட்டுக்கு அருகேயுள்ள பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறிக்க ஏணி மூலம் ஞாயிற்றுக்கிழமை ஏறியுள்ளாா். அப்போது, அவா் எதிா்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினா் அவரை மீட்டு முத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த யமுனாதேவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






