சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு

அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அரியூா் அருகே ஸ்ரீபுரம் ஊசூா் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 65 மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் ஆலங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி விஜயா என்பது தெரியவந்தது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.