பேருந்து நிறுத்தத்தில் பெண் உயிரிழப்பு
அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.

பலி
கோப்புப் படம்

பலி
கோப்புப் படம்
அரியூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் பெண் திடீரென உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், அரியூா் அருகே ஸ்ரீபுரம் ஊசூா் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் புதன்கிழமை 65 மதிக்கத்தக்க பெண் ஒருவா் இறந்து கிடப்பதாக அரியூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் ஆலங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சிவராஜ் என்பவரின் மனைவி விஜயா என்பது தெரியவந்தது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...