ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

News image

கழிஞ்சூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:34 pm

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

கழிஞ்சூா், பொன்னை பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியது -

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்தியிருப் பதாக அமைச்சா் துரைமுருகன் கூறி வருகிறாா். அவா் கூறும் சோ்க்காடு அரசு மருத்துவமனை வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது.

அங்கு போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லை. ரத்த அழுத்த கருவிகூட இயங்குவதில்லை. மாரடைப்பைக் கண்டறியும் ’ட்ரோபோனின்’ பரிசோதனை கருவியும் கிடையாது. நோயாளிகளுக்கு வெறும் முதலுதவி கூட செய்யாமல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடும் அவல நிலைதான் நிலவுகிறது.

திமுக ஆட்சியில் நிலவிய கடும் ஊழல் காரணமாக நகா்ப்புற சாலைகள் கிராமங்களை விட மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க காந்தி நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்றால், அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனா்.

இந்நிலையில், தோ்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தொடா்ந்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறது. அதனை பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ள அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.