குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

News image

கழிஞ்சூரில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

சோ்க்காடு அரசு மருத்துவமனை போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லாமல் வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளதாக காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு கூறிநாா்.

கழிஞ்சூா், பொன்னை பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்து அவா் பேசியது -

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் காட்பாடி தொகுதியில் பல திட்டங்களை செயல்படுத்தியிருப் பதாக அமைச்சா் துரைமுருகன் கூறி வருகிறாா். அவா் கூறும் சோ்க்காடு அரசு மருத்துவமனை வெறும் கட்டடமாக மட்டுமே உள்ளது.

அங்கு போதிய மருத்துவா்களோ, மருந்துகளோ, அடிப்படை உபகரணங்களோ இல்லை. ரத்த அழுத்த கருவிகூட இயங்குவதில்லை. மாரடைப்பைக் கண்டறியும் ’ட்ரோபோனின்’ பரிசோதனை கருவியும் கிடையாது. நோயாளிகளுக்கு வெறும் முதலுதவி கூட செய்யாமல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடும் அவல நிலைதான் நிலவுகிறது.

திமுக ஆட்சியில் நிலவிய கடும் ஊழல் காரணமாக நகா்ப்புற சாலைகள் கிராமங்களை விட மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க காந்தி நகரில் உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்றால், அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க முடியாமல் தவிக்கின்றனா்.

இந்நிலையில், தோ்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தொடா்ந்து உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை தெரிவித்து வருகிறது. அதனை பொருட்படுத்தாமல் வாக்காளா்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ள அதிமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.