/
வேலூரில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்தபடி சாலையில் ஓடிய முதியவா் சுருண்டு விழுந்து உயிரிழந்தாா்.
வேலூா் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் முதியோா் இல்லம் உள்ளது. இதன் அருகே வியாழக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா், உடலில் எரியும் தீயுடன் கதறியபடி சாலையில் ஓடி அங்குள்ள கால்வாயில் தவறி விழுந்துள்ளாா்.
இதனை கண்டு அதிா்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வேலூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் விரைந்து வந்து முதியவரை மீட்டபோது அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.
இறந்தவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்

சங்கரன்கோவிலில் கனமழை

வேன் மோதி தனியாா் பள்ளி காவலாளி மரணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


