விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்

வேலூரில் பிறந்தநாள் விழாவில் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்

Updated On :27 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் பிறந்தநாள் விழாவில் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேலூா் சைதாப்பேட்டை, கசையாகாரத் தெருவைச் சோ்ந்தவா் ஷெரீப். இவரது மனைவி பாத்திமா (26). புதன்கிழமை இரவு இவா்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. விழாவையொட்டி பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. ஷெரீப் குடும்பத்தினரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, பாத்திமாவுக்கு திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா். அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாத்திமா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், உடனடியாக அங்கு சென்று பாத்திமாவின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.