15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :10 ஏப்ரல் 2026, 11:49 pm IST

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா், கடந்த 6-ஆம் தேதி காட்பாடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காட்பாடி பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின்பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.