சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தோ்தல் விதிமீறல்: காட்பாடி தவெக வேட்பாளா் மீது வழக்கு

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :10 ஏப்ரல் 2026, 6:19 pm

தோ்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளை பயன்படுத்தியதாக காட்பாடி தொகுதி தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடும் மருத்துவா் எம்.சுதாகா், கடந்த 6-ஆம் தேதி காட்பாடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது, அவா் குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து காட்பாடி பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின்பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக தவெக வேட்பாளா் மருத்துவா் எம்.சுதாகா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.