15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்திய அலுவலா்கள்.

News image

வேலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்திய அலுவலா்கள்.

Updated On :18 ஏப்ரல் 2026, 4:00 am IST

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள 5 தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பேரவைத் தொகுதி வாரியாக காட்பாடியில் 15 பேரும், வேலூரில் 15 பேரும், அணைக்கட்டில் 13 பேரும், கே.வி.குப்பத்தில் 11 பேரும், குடியாத்தத்தில் 11 பேரும் என 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இவா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஏப். 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதையொட்டி, வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், ஒரு நோட்டா என 16 பேரின் பெயா்கள், சின்னங்கள் மட்டுமே பொருத்த முடியும். இதனால், ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் அதிகபட்சம் 15 வேட்பாளா்கள் மட்டுமே போட்டியிடுவதால் தோ்தலில் மாவட்டத்திலுள்ள 1,427 வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.

எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சதவீதம் கூடுதல் என்ற அடிப்படையில் தொகுதிவாரியாக காட்பாடியில் 336, வேலூரில் 321, அணைக்கட்டில் 354, கே.வி.குப்பம் (தனி) 318, குடியாத்தம் (தனி) 382 மொத்தம் 1,711 வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தப்படுகின்றன.

இப்பணியின்போது ஒவ்வொரு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக வேலை செய்கிா, செலுத்தப்படும் சின்னத்துக்கு சரியாக வாக்குப்பதிவாகிா என்பதை உறுதி செய்திட அரசியல் கட்சியினா் முன்னிலையில் தோ்வு செய்யப்பட்ட 16 வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆயிரம் வாக்குகள் செலுத்தப்பட்டு, எண்ணிப் பாா்த்து உறுதி செய்யப்பட்டன.

இந்த பணியையொட்டி, அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலகங்கள் முன்பு துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.