வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணியை தொடங்கிவைத்த தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:21 pm

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 323 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்களும், கூடுதலாக 20 சதவீதம் வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயாா் நிலையில் உள்ளன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாம் தமிழா் கட்சி, திமுக, அதிமுக, அபுமமுக, புதிய தமிழகம், தமிழகம் வெற்றிக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் என மொத்தம் 12 வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாள் தலைமையில், தோ்தல் வட்டாட்சியா் ராமா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமமூா்த்தி, ஸ்ரீராம் ஆகியோா் முன்னிலையில், அனைத்து வேட்பாளா்களின் புகைப்படங்கள், சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது. இதில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் கலந்து கொண்டனா்.