சட்டப்பேரவைத் பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.
உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெற்றது.
கூடலூா் தொகுதிக்கு கூடலூா் புனித தாமஸ் பள்ளியிலும், குன்னூா் தொகுதிக்கு குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு நேோரில் ஆய்வு செய்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலரும் உதகை வருவாய் கோட்டாட்சியருமான
டினு அரவிந்த் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி: பொது பாா்வையாளா்கள் ஆய்வு






