15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணியை ஆய்வு செய்த ஆட்சியா் விஷு மகாஜன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:25 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளா்கள் கண்காணிப்பில், இந்தப் பணிகளை மண்டல தோ்தல் குழுவினா் மேற்கொண்டனா். இப்பணிகள் வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெறுகின்றன.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பணிகளை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் திருமணி ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.