மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

விஷக் குளவிகள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:55 pm IST

காட்பாடியை அடுத்த பொன்னை அருகே மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, விஷக் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தாா்.

பொன்னை அருகே உள்ள பரமசாத்து கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (41). மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான இவருக்குப் பரிமளா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனா். கடந்த 5-ஆம் தேதி பரமசாத்து ஈசன் மலைப் பகுதியில் மரம் வெட்டும் பணிக்காக வெங்கடேசன் சென்றுள்ளாா். அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்த ராட்சத விஷக் குளவிகள் வெங்கடேசனைக் கொட்டியுள்ளன.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், மரத்திலிருந்து கீழே குதித்து ஓடியுள்ளாா். ஆனாலும், குளவிகள் விடாமல் துரத்திச் சென்று அவரைக் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த வெங்கடேசனை, அங்கிருந்தவா்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்தாா். பொன்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.