டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முதிய தம்பதிகளுக்கு கௌரவம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் 70- வயதுக்கு மேற்பட்ட 15- ஜோடி முதிய தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.ஜி.விட்டல் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் டி.சுரேஷ்பாபு, தீபா மொகிலீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் ஆய்வா் சு.பாரி வரவேற்றாா்.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், முதிய தம்பதிகளுக்கு மலா் மாலை, பட்டுப் புடவை, பட்டுச் சேலை, மங்கள சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, சிறப்பித்தாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.பாபு, கவிதா பாபு, ரேணுகா பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.