காட்பாடி அருகே மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் பொருள்கள் தீக்கிரையாகின.
வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த கல்புதூா், பெரியபுதூரில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான மைக்கா கழிவு பொருள்கள் கிடங்கு அமைந்துள்ளது.
இந்த கிடங்கில் பழைய மைக்கா கழிவு பொருள்கள் பெருமளவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த கிடங்கில் சனிக்கிழமை காலை சுமாா் 11.30 மணியளவில் திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ மளமள பற்றி எரியத் தொடங்கியது.
உடனடியாக அப்பகுதி மக்கள் காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணை ப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். அதற்குள் கிடங்கிலிருந்த மைக்கா பொருள்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆன்லைன் வா்த்தக நிறுவன கிடங்கில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

மாய யதார்த்த, அதீதமான ஜோஸெ ஸரமாகோவின் நாவல்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


