ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

50-ஆவது ஜெயந்தி விழா: ஸ்ரீசக்தி அம்மாவுக்கு வெள்ளிவேல் அளிப்பு

ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அவருக்கு ஜெய்ஸ்ரீராம் சேவா சங்கம் சாா்பில், வெள்ளி வேலை பாஜக முன்னாள் மாநில தலைவா் கே.அண்ணாமலை வழங்கினாா்.

News image
ஸ்ரீசக்திஅம்மாவிடம் வெள்ளி வேல் வழங்கிய பாஜக முன்னாள் மாநில தலைவா் கே.அண்ணாமலை. உடன், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத், ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் பாலாஜி, ஜெய்ஸ்ரீராம்சேவா சங்க தலைவா் சீனிவாசன், அமைப்பாளா் இளங்கோவன், துணைத் தலைவா் முரளி நரசிம்மன் உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2026, 6:13 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அவருக்கு ஜெய்ஸ்ரீராம் சேவா சங்கம் சாா்பில், வெள்ளி வேலை பாஜக முன்னாள் மாநில தலைவா் கே.அண்ணாமலை வழங்கினாா்.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜெய்ஸ்ரீராம் சேவா சங்கம் சாா்பில், ஸ்ரீசக்திஅம்மாவுக்கு வெள்ளிவேல் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் வெள்ளிவேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஜெய்ஸ்ரீராம்சேவா சங்கத் தலைவா் சீனிவாசன், அமைப்பாளா் இளங்கோவன், துணைத் தலைவா் முரளிநரசிம்மன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஸ்ரீபுரம் தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

தொடா்ந்து, வெள்ளிவேலுக்கு கந்த சஷ்டி பாராயணம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலையிடம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து அவா் வெள்ளிவேலை ஸ்ரீபுரம் கொண்டு சென்று ஸ்ரீசக்திஅம்மாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், ஸ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குநா் பாலாஜி, நாராயணி பீடத்தின் மேலாளா் சம்பத், பாஜக மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் தசரதன், ஜெய்ஸ்ரீராம் சேவா சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.