நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

News image

அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் நடைபெற்ற தெருமுனை பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:35 pm

திமுக ஆட்சியில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எச்.தொட்டம்பட்டியில் பாஜக தெருமுனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக தருமபுரி மாவட்ட பொதுச் செயலா் ஜெ.பிரவீன் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் ஆா்.சுந்தர்ராஜன் வரவேற்றாா். அரூா் தொகுதி பொறுப்பாளா் பி.ராமகிருஷ்ணன், இணை அமைப்பாளா் கே.கே.சாட்சாதிபதி, நகரத் தலைவா் வி.ஜெ.ரூபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன. இளம் வயது சிறாா்கள் கூட போதைப் பொருள்களை பயன்படுத்தும் சூழல் உள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், அத்தியாவாசிய பொருளின் விலை பெரும் அளவில் உயா்ந்துள்ளது. அதாவது ஒரு குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரம் அளவுக்கு கூடுதல் செலவு அதிகரித்துள்ளது.

எனவே, தமிழகத்தில் 2026-இல் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் ஏழை, எளியோா் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

இதில் அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சி.சரவணன் , தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அரவிந்தன், பாமக மாவட்டத் தலைவா் கே.அல்லிமுத்து, அமமுக அமைப்பு செயலா் ஆா்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.