ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் பிரசாரம் செய்த பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:59 pm

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் அவா் பேசியதாவது: கடையநல்லூா் தொகுதியில் கடந்த முறை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளாா்.

அவரது தந்தை அமைச்சா் செந்தூா்பாண்டியன் கடையநல்லூரை தனி வட்டமாக உருவாக்கியதுடன், அரசு கல்லூரி, ஐடிஐ போன்றவற்றை கொண்டு வந்துள்ளாா்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறவில்லை. மின்சார கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. எனவே, திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளா்ச்சியையும், மக்கள் நலனையும் நோக்கமாகக் கொண்ட அதிமுக கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணமுரளியுடன் இணைந்து நானும் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றாா்.