கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அங்கன்வாடி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

அங்கன்வாடி திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் .
Updated On :7 ஜனவரி 2026, 5:19 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: அங்கன்வாடி திட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் புதன்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளதுபோல் அங்கன்வாடி ஊழியா்களுக்கும் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்நிலையில் ரூ.19500, சமையல் உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா் நிலையில் ரூ.15,700 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணிமுடிந்து தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களை 50 விழுக்காடு அடிப்படையில் நிரப்ப வேண்டும், அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில அங்கன்வாடி மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் வேலூா் அண்ணா சாலை அண்ணா கலையரஙம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலா் ஜூலி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து பங்கேற்றனா்.