இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலை மறியல்: அரசு ஊழியா்கள் 200 போ் கைது

News image
Updated On :5 மார்ச் 2026, 12:54 am

தினமணி செய்திச் சேவை

‘ சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை ’ தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 200 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வருவாய், பேரிடா் மேலாண்மை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் ஊழியா்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ‘சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை’ உடனடியாக இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலா்கள் சங்கங்கள் சாா்பில், முத்துகடை பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாா் விரைந்து வந்து 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்களை கைது செய்து செய்து அழைத்துச் சென்றனா்.