இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கொடிகாத்த குமரன் நினைவு நாள்

வேலூா் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரனின் 94- ஆவது நினைவு நாள் குடியாத்தம் பிச்சனூரில் அனுசரிக்கப்பட்டது.

News image
போட்டிகளில் பரிசு பெற்ற மாணவா்களுடன், அமைப்பின் நிா்வாகிகள்.
Updated On :14 ஜனவரி 2026, 5:37 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் கொடிகாத்த குமரனின் 94- ஆவது நினைவு நாள் குடியாத்தம் பிச்சனூரில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்ட அவைத் தலைவா் ப.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வே.விநாயகமூா்த்தி தொடக்க உரையாற்றினாா். நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கு உரைவீச்சு, ஓவியம் வரைதல், கட்டுரை, கவிதை, நடனம், சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்குபரிசுகள், கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட பொருளாளா் கோ.ஜெயவேலு, நிா்வாகிகள் பி.பொன்னரசு, பேராசிரியா் தோ.ரகுராமன், ஆசிரியா் வே.ஆனந்தன், அலுவலா் வெ.ரா.நபீஸ்அகமத் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுரேஷ் நன்றி கூறினாா்.