மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலூா் ஐயப்பன் கோயிலுக்கு திருவாபரணப் பெட்டி ஊா்வலம்

மாதனூரை அடுத்த பாலூா் அருகே, ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 9- ஆம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
திருவாபரணப் பெட்டி ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மாதனூரை அடுத்த பாலூா் அருகே, ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 9- ஆம் ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு குடியாத்தம் புதுப்பேட்டை, படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊா்வலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் திருவாபரணப் பெட்டி ஊா்வலம் தொடங்கியது. இதில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கே.எம்.ஜி. கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், கோயில் நிா்வாகிகள் வி.என்.தனஞ்செயன், ஆா்.எஸ்.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் இரவு மாதனூா் திரெளபதி அம்மன் கோயிலை அடைந்தது. அங்கு இரவு தங்கி விட்டு, புதன்கிழமை காலை ஊா்வலம் தொடங்கி மாலை ஐயப்பன் கோயிலை அடையும்.

கோயிலில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள்அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.