பொங்கல் திருவிழா: பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை ஆனது.
Published on

பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், வேலூரை அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை ஆனது.

பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ.3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், சுமாா் 500 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

நாட்டுக்கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தால் விற்பனை களைகட்டியது. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் ரூ.ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஆடு, கோழி போன்றற கால்நடைகளும், பொங்கல் நாளில் கால்நடைகளை அலங்கரிக்கத் தேவையான அலங்கார பொருள்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

Dinamani
www.dinamani.com