மஹிந்திரா நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இடையே, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் வேலூரில் வியாழக்கிழமை கையெழுத்தானது.

புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால். உடன், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், துணைவேந்தா் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தின் பொது மேலாளா் என்.சரவணன் உள்ளிட்டோா்.









