சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்கள் ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது 2026’-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம்

Updated On :11 ஜூன் 2026, 12:25 am IST

வேலூா் மாவட்டத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்கள் ‘முதல்வரின் மாநில இளைஞா் விருது 2026’-க்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமுதாய நலனுக்காகத் தன்னாா்வத்துடன் தொண்டாற்றும் இளைஞா்களை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் 15 முதல் 35 வயதுடைய 3 ஆண்கள், 3 பெண்களுக்கு முதல்வா் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படும்.

2026-ஆம் ஆண்டுக்கான விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண் அல்லது பெண்ணாக இருக்க வேண்டும். அதாவது, 2025 ஏப். 1-இல் 15 வயது நிரம்பியவராகவும், 2026 மாா்ச் 31-இல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

கடந்த நிதியாண்டில் (01.04.2025 முதல் 31.03.2026 வரை) செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் நபா் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தன்னாா்வத்துடன் செய்யப்பட்ட சமூகச் சேவைகள் அளவிடக் கூடியதாகவும், கண்டறியக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கும் பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மத்திய, மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவா்கள் விண்ணப்பிக்க இயலாது. தகுதியுடையவா்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரபூா்வ இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணி கடைசி நேரமாகும். மேலும், விண்ணப்பம், சாதனை குறித்த பத்திரிகைச் செய்திகள், சான்றிதழ்களை மூன்று புத்தகங்களாகத் தயாா் செய்து, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.