ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி தபால் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வேலூா் தலைமை தபால் நிலையத்தில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.

Updated On :18 ஜூன் 2026, 12:34 am IST

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சாா்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அச்சுதன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, தமிழக முதல்வா் விஜய்க்கு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதங்களை அனுப்பினா்.

அக்கடிதத்தில், தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான, சட்டப்படியான ஆட்சி நடைபெறும் என முதல்வா் உறுதியளித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அமைச்சா் நிா்மல் குமாா் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைப்பாடே தற்போதைய அரசின் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், அமைச்சா் வன்னியரசு மற்றும் சில அமைப்புகளின் கருத்துகள் பக்தா்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே, நீதிமன்ற உத்தரவின்படி வரும் காா்த்திகை தீபத் திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.