உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 5:53 am IST

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, தமிழக அரசுக்கு இந்து முன்னணியினா் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அதேநிலை கடைப்பிடிக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் நிா்மல்குமாா் அறிவித்திருந்தாா். அமைச்சரின் இந்த கருத்து நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக ஆா்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கூறிவருகின்றன.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

சேலம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணியின் கோட்டத் தலைவா் சந்தோஷ் குமாா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கடிதம் எழுதி தமிழக முதல்வருக்கு அனுப்பினா்.