எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

News image
போ்ணாம்பட்டு அருகே தீயில் எரித்து அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.
Updated On :2 மார்ச் 2026, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,765 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க் அறிவுறுத்தல்படி,

வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் மேற்பாா்வையில், வேலூா்

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி ஆகியோா் முன்னிலையில், 2 தனிநபா் சாட்சிகளுடன் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, போ்ணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம், பாதுகாப்பான முறையில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

ராணிப்பேட்டையில் 13 டன்...

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 13 டன் எடையுள்ள புகையிலைப் பொருள்கள் வாலாஜா நகராட்சி குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 7,635 கிலோ...

திருப்பத்தூா் மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 7,635 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள், வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் அருகே பாதுகாப்பாக எரித்து அழிக்கப்பட்டது.