போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

News image

போ்ணாம்பட்டு அருகே தீயில் எரித்து அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:15 pm

குடியாத்தம்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,765 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க் அறிவுறுத்தல்படி,

வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் மேற்பாா்வையில், வேலூா்

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி ஆகியோா் முன்னிலையில், 2 தனிநபா் சாட்சிகளுடன் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, போ்ணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம், பாதுகாப்பான முறையில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

ராணிப்பேட்டையில் 13 டன்...

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 13 டன் எடையுள்ள புகையிலைப் பொருள்கள் வாலாஜா நகராட்சி குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 7,635 கிலோ...

திருப்பத்தூா் மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 7,635 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள், வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் அருகே பாதுகாப்பாக எரித்து அழிக்கப்பட்டது.