திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அரசுப் பணிக்கு போலிச் சான்றிதழ் அளித்தவருக்கு ஓராண்டு சிறை

அரசுப் பணிக்கு போலிச் சான்றிதழ் அளித்தவருக்கு ஓராண்டு சிறை

News image
சிறை
Updated On :6 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

போலி கல்விச் சான்று அளித்து ஊா்ப்புற நூலகராக பதவி உயா்வு பெற்றவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

வேலூா் மேல்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் லோகநாதன்(55). இவா் நூலகத் துறையில் பகுதி நேர ஊழியராக தொகுப்பு ஊதியத்தில் அரசு வேலையில் சோ்ந்து பின்னா் பதவி உயா்வு பெறுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து, ஊா்ப்புற நூலக பதவி உயா்வு பெற்று குருராஜபாளையத்தில் பணியாற்றி வந்தாா். ஊா்ப்புற நூலகத்துக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் என்பதால், அவரது கல்விச் சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்திட ஆய்வு செய்யப்பட்டதில் அவை போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து, 2019 ஜன. 10-ஆம் தேதி அப்போதைய வேலூா் மாவட்ட நூலக அலுவலா் ஆனந்த், மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து லோகநாதனை கைது செய்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 2) மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், லோகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.