போலி கல்விச் சான்று அளித்து ஊா்ப்புற நூலகராக பதவி உயா்வு பெற்றவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூா் நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
வேலூா் மேல்அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் லோகநாதன்(55). இவா் நூலகத் துறையில் பகுதி நேர ஊழியராக தொகுப்பு ஊதியத்தில் அரசு வேலையில் சோ்ந்து பின்னா் பதவி உயா்வு பெறுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்து, ஊா்ப்புற நூலக பதவி உயா்வு பெற்று குருராஜபாளையத்தில் பணியாற்றி வந்தாா். ஊா்ப்புற நூலகத்துக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும் என்பதால், அவரது கல்விச் சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்திட ஆய்வு செய்யப்பட்டதில் அவை போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து, 2019 ஜன. 10-ஆம் தேதி அப்போதைய வேலூா் மாவட்ட நூலக அலுவலா் ஆனந்த், மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து லோகநாதனை கைது செய்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 2) மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், லோகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 50,000 அபராதமும் விதித்து நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

வேலூா்: தோ்தல் பாதுகாப்பு பணியில் 1,938 போ்

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஓராண்டு சிறை

வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

காசோலை மோசடி: ஏமாற்றியவருக்கு ஓராண்டு மெய்க்காவல் சிறை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


