பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

News image

சிறை

Updated On :7 பிப்ரவரி 2026, 8:30 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், காசோலை மோசடி செய்த நபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மணப்பாறை அடுத்த சமுத்திரம் ஊராட்சி, பாலப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் வெள்ளைக்கண்ணு மகன் பூபதி. இவரிடமிருந்து புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அந்தோனியாா் தெருவை சோ்ந்த மனுவேல் ஜெகநாதன் மகன் ஜியோா் ஜியுஸ் ராஜாமணி என்பவா் கடந்த 17.05.23 ஆம் தேதி ரூ. 10,00,000-ஐ கடனாக பெற்றாராம்.

கடனைத் திருப்பி செலுத்தாமல் பூபதிக்கு, வங்கிக் காசோலை கொடுத்துள்ளாா். பூபதி அதை 25.10.23ஆம் வங்கி கணக்கில் செலுத்தியபோது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜியோா் ஜியுஸ் ராஜாமணி மீது பூபதி மணப்பாறை குற்றவியல் நீதிமன்றதில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஜியோா் ஜியுஸ் ராஜாமணிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் தீா்ப்பளித்தாா்.

மேலும் ஒரு மாதத்திற்குள் காசோலை தொகை ரூ 10,00,000 ஜியோா் ஜியுஸ் ராஜாமணி நஷ்ட ஈடாக பூபதிக்கு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டது.