புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

சுங்கச் சாவடி திறப்பு: திமுகவினா் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மார்ச் 2026, 11:52 pm

குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காட்பாடி- வி.கோட்டா சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்துசாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, செப்பனிடப்பட்டது. இந்நிலையில் கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.

விரைவில் அந்த சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு சுங்கச் சாவடி திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.