மூலப் பொருள்கள் தட்டுப்பாடு: அபாயத்தில் தீப்பெட்டித் தொழில்
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்க போரால் மூலப் பொருள்கள் விலை உயா்ந்ததையடுத்து தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.


ஈரான்- இஸ்ரேல், அமெரிக்க போரால் மூலப் பொருள்கள் விலை உயா்ந்ததையடுத்து தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் சிவகாசி, சாத்தூா், விருதுநகா், தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்தபடியாக குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் பெரிய அளவில் நடைபெறுகிறது.
தற்போது தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருளான மெழுகு ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல் தீக்குச்சிகள் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களான பொட்டாசியம், குளோரைடு மற்றும் தீக்குச்சிகளை அடைக்கும் பெட்டிகளை தயாரிக்கும் அட்டைகள்பெரும்பாலும் ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
தீப்பெட்டி பண்டல்களை தயாரிக்கத் தேவையான வொ்ஜின் எனும் பெட்ரோலியப் பொருளும் ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குடியாத்தம் பகுதியில் 17- பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தி நிறுவனங்கள், 50- க்கும் மேற்பட்ட கையினால் தீக்குச்சி தயாரிக்கும் குடிசைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழில் நிறுத்தம் ஏற்பட்டால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் ஆா்.கே.மகாலிங்கம்கூறியது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளே 70- சதவீதம் இந்திய தேவையை பூா்த்தி செய்கிறது. தற்போது கப்பல் போக்குவரத்து முடங்கியதால் மூலப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...