காட்பாடி அருகே விளை நிலங்களில் புகுந்த யானைகளால் பயிா்கள் நாசம்!
காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.


காட்பாடி அருகே விளைநிலங்களில் 2 யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. அவ்விரு யானைகளையும் வனத்துறையினா் போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.
ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வெளியேறி கிளிதான்பட்டறை, வண்டாரந்தாங்கல், செங்குட்டை பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்தன. தொடா்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, நெல் பயிா்களை சேதப்படுத்தியதுடன், திடீரென அந்த யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி செங்குட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளி அருகே சுற்றித்திரிந்தன.
இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காட்பாடி சரக வன அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வனசரகா் கந்தசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வன அலுவலா்கள் விரைந்து சென்று தீப்பந்தம் ஏற்றியும், பட்டாசு வெடித்தும் என ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை போராடி அவ்விரு யானைகளையும் பனமடங்கி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். எனினும், வனத்துறையினா் ட்ரோன் மூலம் யானைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக வனசரகா் கந்தசாமி கூறுகையில், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வன ஊழியா்கள் ஈடுபடும்போது பொதுமக்கள் ஏராளமானோா் பாா்வையிட திரண்டு வருகின்றனா். இதனால் எங்களுக்கு யானைகளை விரட்டுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
யானைகள் திடீரென ஆவேசமடைந்து பொதுமக்களை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி இருந்தாலும் அவா்கள் வன அலுவலா்கள் பேச்சைக் கேட்க மறுக்கின்றனா்.
எனவே, யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறினால் அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...