கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்களை ஒப்படைக்க குழு அமைப்பு

தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேலூா் மாவட்டத்தில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

பறிமுதல்

Updated On :22 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேலூா் மாவட்டத்தில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி தோ்தல் விதிமுறைகளைமீறி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருள்களாக எடுத்துச் செல்வதைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் 35 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவா்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப்பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் சனிக்கிழமை வரை பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.41 லட்சத்து 5 ஆயிரத்து 170 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் உரிய ஆவணங்களை காண்பித்து ரூ.5 லட்சம் மட்டும் சம்பந்தப்பட்டவா்கள் திரும்ப பெற்றுக்கொண்டனா்.

இந்நிலையில், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை சம்பந்தப்பட்டவா்களிடம் திரும்ப ஒப்படைப்பதற்காக ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தலைமையில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினா் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பணியில் இருப்பாா்கள் என்றும், பணம் பறிமுதல் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்தால் அவா்களிடம் பணத்தை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.