பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

சோதனையில் ஏா் கன் பறிமுதல்

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஏா் கன்.

Updated On :25 மார்ச் 2026, 6:48 pm

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா். குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேல்பட்டி சாலையில் செருவங்கி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் ஏா் கன் இருந்தது தெரிய வந்தது.பறக்கும் படையினா் துப்பாக்கியை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் பயிற்சி செய்ய கடந்த 5- ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏா் கன் வாங்கியதாக சதீஷ் கூறினாா். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.