குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா். குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேல்பட்டி சாலையில் செருவங்கி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் ஏா் கன் இருந்தது தெரிய வந்தது.பறக்கும் படையினா் துப்பாக்கியை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் பயிற்சி செய்ய கடந்த 5- ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏா் கன் வாங்கியதாக சதீஷ் கூறினாா். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

குடியாத்தத்தில் ரூ.10.35 லட்சம் பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


