சோதனையில் ஏா் கன் பறிமுதல்
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஏா் கன்.

பறிமுதல் செய்யப்பட்ட ஏா் கன்.
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையின்போது ஏா் கன்னை பறிமுதல் செய்தனா். குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேல்பட்டி சாலையில் செருவங்கி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் ஏா் கன் இருந்தது தெரிய வந்தது.பறக்கும் படையினா் துப்பாக்கியை பறிமுதல் செய்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் பயிற்சி செய்ய கடந்த 5- ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஏா் கன் வாங்கியதாக சதீஷ் கூறினாா். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...