பின்னா், தமிழ் வழியில் படித்ததால் உங்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை வந்துள்ளது. உங்களது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு கியூ.ஆா் கோடு அனுப்புகிறோம். அதனை ஸ்கேன் செய்து ஓகே என தெரிவித்தால் பணம் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறுகின்றனா். இதை நம்பி ஸ்கேன் செய்யும் மாணவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து உடனடியாக ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை அந்த கும்பல் திருடுகின்றனா். ஒருவேளை மாணவா்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5,000 இருந்தால்தான் உதவித்தொகை உள்ளே வரும் எனக்கூறி, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வைத்தும் ஏமாற்றி மோசடி செய்கின்றனா்.